PUBLIC TV TAMIL - 17-ஆம் ஆண்டு சுனாமி தினத்தையொட்டி திருவொற்றியூர் அதிமுக சார்பில் 1008 குடம் பால் ஊற்றி அஞ்ச

PUBLIC TV TAMIL - 17-ஆம் ஆண்டு சுனாமி தினத்தையொட்டி திருவொற்றியூர் அதிமுக சார்பில் 1008 குடம் பால் ஊற்றி அஞ்ச

PUBLISHED:26-Dec-2021

17-ஆம் ஆண்டு சுனாமி தினத்தையொட்டி திருவொற்றியூர் அதிமுக சார்பில் 1008 குடம் பால் ஊற்றி அஞ்சலி.

சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி அஇஅதிமுக சார்பில் பட்டினத்தார் கோவில் அருகிலிருந்து 1008 பால் குடங்களை பெண்கள் சுமந்தபடி, பேரணியாக சென்று திருவோற்றியூர் குப்பம் கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு பகுதி செயலாளருமான கே.குப்பன் தலைமையில் நடைபெற்றது 

இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி கலந்து கொண்டு பால்குடம் ஊர்வலத்தை தொடங்கி வைத்து கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் இதில் கலந்து கொண்ட 1000 மேற்பட்ட பெண்களுக்கு புடவை மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருவொற்றியூர் மேற்கு பகுதி தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் கே.கார்த்திக், செய்திருந்தார்.

இதில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சிவில் M.முருகேசன் , மாவட்ட பொருளாளர்  PTC.இராஜேந்திரன் , பகுதி செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம் , வட்ட செயலாளர்கள் S.சங்கர் , E.வேலாயுதம் , M.மணிகுமார் , S.சரவணன் , M.சின்னா , கோபாலகிருஷ்ணன் , மற்றும் அதிமுக நிர்வாகிகள் R.M.கோகுலகிருஷ்ணன் , காஞ்சி சித்ரா , மணிமாறன் , எட்வின் , SP.புகழேந்தி , RE.பாலு , P.T.விஜய் , PRG.தினேஷ்குமார் , MRF.பாலகிருஷ்ணன் , வினோத் குமார் , M.முருகன் , S.கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You