மாணவர்களின் உயிர் காக்க வேகத்தடை அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.!

மாணவர்களின் உயிர் காக்க வேகத்தடை அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.!

PUBLISHED:03-Jan-2022

மாணவர்களின் உயிர் காக்க வேகத்தடை அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.!

சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும்  முருகப்பா குழுமத்தின் மேல்நிலைப்பள்ளியான வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி திருவொற்றியூர் பெரியார் நகரில் நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த பள்ளிக்கு எதிரே மெட்ரோ ட்ரெயின் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் நுழைவு வாயிலில் அருகே  உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்

வேகத்தடை இல்லாததால் மாணவ மாணவிகள் பயத்திலும் பீதியிலும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். 

இந்த இடத்தில் பள்ளி மாணவ மாணவியரின் நலனுக்காக வேகத்தடை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுத் துறைக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை வேகத்தடை அமைக்காமல் உள்ளனர்.

எனவே மாணவர்களின் உயிர் காக்க அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




Recommended For You