திருவொமற்றியூர் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்.

திருவொமற்றியூர் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்.

PUBLISHED:04-Jan-2022

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு.

பொங்கல் வைப்பதற்கு  தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் வழங்கப்படுகிறது.

மொத்தம் 2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைக்கிறார். 

அதனைத் தொடர்ந்து சென்னை திருவொற்றியூர் அம்பேத்கார் நகரில் உள்ள நியாய விலை கடையில் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

அருகில் பகுதி அவைத்தலைவர் வி.ராமநாதன் , 5வது வட்ட செயலாளர் கே.பி.சொக்கலிங்கம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.




Recommended For You