திருவொற்றியூர் 29வது வட்ட அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்.

திருவொற்றியூர் 29வது வட்ட அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்.

PUBLISHED:18-Jan-2022

அஇஅதிமுகவின் நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவொற்றியூர் சின்னசேக்காடு பார்த்தசாரதி தெருவில் 29வது மேற்கு வட்ட செயலாளர் R.சிவக்குமார் Ex.Mc ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் V.மூர்த்தி , மேற்கு பகுதி செயலாளர் K.குப்பன் Ex Mla ஆகியோர் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

அருகில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சிவில் M.முருகேசன் , மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் M.தமிழரசன் , வட்ட துனைச்செயலாளர் A.கோபி, N.செல்வம், ஆ.இளையராஜா, லோகநாதன், சிவசங்கர் உட்பட மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You