PUBLIC NEWS TV TAMIL - சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் S.சுதர்சனம் MLA நேர்காணல் நடத்தினார்.

PUBLIC NEWS TV TAMIL - சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் S.சுதர்சனம் MLA நேர்காணல் நடத்தினார்.

PUBLISHED:20-Jan-2022

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி

மாநில தேர்தல் ஆணையம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒருசில பொது பெண்கள் வார்டுகளை பொது வார்டாக மாற்றி இடஒதுக்கீடு செய்ததை அடுத்து

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாதவரம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 5க்கும் மேற்பட்ட பொது வார்டுகளில் போட்டியிடுவதற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள்  தங்களது விருப்ப மனுவை பூர்த்தி செய்து மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று வழங்கினார்கள்.

இதையடுத்து அதற்கான நேர்காணல் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் S.சுதர்சனம் MLA விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.

அப்போது பகுதி  பொறுப்பாளர் G.துக்காராம், மாவட்ட துணை செயலாளர் T.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




Recommended For You