திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி பகுதி செயலாளர் கே.கார்த்திக் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரின் நல்ல ஆசையோடும் , திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி , திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.குப்பன் ஆகியோரின் பேராதரவோடு
சென்னை பெருநகர மாநகராட்சி திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி பகுதி செயலாளரும், தொழிலதிபருமான கே.கார்த்திக் தனது வேட்பு மனுவை 1வது மண்டலத்தில் தேர்தல் அதிகாரியிடம் வழங்கி மனு தாக்கல் செய்தார்.
இதன் முன்னதாக அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தார்.