இராயபுரம் 53வது வார்டு அதிமுக வேட்பாளர் R.தீபா பொது மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு..!
சென்னை மாநகராட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இராயபுரம் தொகுதிக்குட்பட்ட 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தீபா ராஜேஷ் மூலக்கொத்தளம் பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் பகுதி செயலாளர் V.M.மகேஷ் , ரவி Ex Mc, வட்ட செயலாளர்கள் VRS.சக்தி ராஜேஷ் , பா.சங்கர் உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என பலர் இருந்தனர்.