சென்னை:
எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் புதிய திரைப்படங்களின் போலி டிவிடிக்கள் தயாரிக்கப்படுவதாக திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் துரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் ஒருவர் நடமாடினார். அவரை பிடித்து பையை சோதனை செய்தனர். அப்போது புதிய திரைப்படங்களின் போலி டிவிடிக்கள் இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது புளியந்தோப்பு வீரச்சாமி தெருவை சேர்ந்த முஸ்தபா (33) என்பது தெரியவந்தது.
இவர் சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள அடுக்கு மாடி வீட்டில் 2வது மாடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து போலி டிவிடிக்கள் தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து முஸ்தபாவை போலீசார் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து விவேகம், யார் இவன், துப்பறிவாளன் உள்ளிட்ட புதிய திரைப்படங்களின் 8,590 டிவிடிக்கள் மற்றும் 10 ரைட்டிங் மிஷன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம்.