இராயபுரம் பகுதியில் தொடர்ந்து ஒன்பது நாளாக மின்வெட்டு மின்வாரியம் அலட்சியம்.
இராயபுரம் பகுதியில் கடந்த 28/9/2017 தேதியன்று பழையவண்ணை போஜ ராஜ நகரில் மின்வெட்டு ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஸ்டான்லி மின்வாரியத்தில் 04425289412 என்ற எண்ணில் புகார் அளிக்கப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து மின்வாரிய அதிகாரி உதவி பொறியாளர் தீனானிடம் 29/9/2017 தேதியன்று தொர்பு கொண்ட போது தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை காரணத்தால் தாமதம் ஏற்படுகிறது விரைவில் சீர் செய்து தரப்படும் என்று கூறினார் அதுவரை அருகிலுள்ள வீடுகளிலிருந்து மின்இணைப்பு பெற்று கொள்ளுமாறு அறையுரை வழங்கினார்.
மின்வெட்டு ஏற்பட்டு ஒன்பது நாளாகியும் 6/10/2017 இன்று வரை அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை அதிகாரிகளின் அலட்சியமா அதிமுக அரசு மாமன்ற உறுப்பினர் இல்லை என்ற மெத்தனமா அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நாளை சனிக்கிழமை 7/10/2017 வரை மின்வெட்டு சீர் செய்ய படாவிட்டால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடபோவதாக கூறியுள்ளனர்.
இராயபுரம் தொகுதி எம்எல்ஏ மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் என்பது குறிப்பிடதக்ககது.