PUBLIC NEWS TV- இராயபுரம் பகுதியில் தொடர்ந்து ஒன்பது நாளாக மின்வெட்டு மின்வாரியம் அலட்சியம்.

PUBLIC NEWS TV- இராயபுரம் பகுதியில் தொடர்ந்து ஒன்பது நாளாக மின்வெட்டு மின்வாரியம் அலட்சியம்.

PUBLISHED:06-Oct-2017

இராயபுரம் பகுதியில்  தொடர்ந்து  ஒன்பது நாளாக மின்வெட்டு மின்வாரியம் அலட்சியம்.

இராயபுரம் பகுதியில் கடந்த 28/9/2017 தேதியன்று   பழையவண்ணை போஜ ராஜ நகரில் மின்வெட்டு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஸ்டான்லி மின்வாரியத்தில்  04425289412 என்ற எண்ணில்   புகார்  அளிக்கப்பட்டது. 

உரிய  நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து மின்வாரிய அதிகாரி உதவி பொறியாளர்  தீனானிடம் 29/9/2017 தேதியன்று தொர்பு கொண்ட போது தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை  காரணத்தால் தாமதம் ஏற்படுகிறது  விரைவில் சீர்  செய்து தரப்படும் என்று கூறினார் அதுவரை  அருகிலுள்ள  வீடுகளிலிருந்து மின்இணைப்பு பெற்று  கொள்ளுமாறு அறையுரை வழங்கினார்.  

மின்வெட்டு ஏற்பட்டு ஒன்பது  நாளாகியும் 6/10/2017 இன்று வரை அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை அதிகாரிகளின்  அலட்சியமா அதிமுக அரசு  மாமன்ற உறுப்பினர் இல்லை என்ற  மெத்தனமா அப்பகுதி  பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நாளை சனிக்கிழமை  7/10/2017 வரை மின்வெட்டு சீர் செய்ய படாவிட்டால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடபோவதாக கூறியுள்ளனர்.

இராயபுரம் தொகுதி எம்எல்ஏ மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் என்பது குறிப்பிடதக்ககது.

 




Recommended For You