திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் பகுதி 7வது வட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர்,கார்கில் நகர்,ராஜாஜி நகர்,உள்ளிட்ட பகுதி முழுவதும் டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவிவரும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் நிலவேம்பு கசாயம், மற்றும் முழு கொழுப்பு சத்து நிறைந்த அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட் ஆகியவைகளை 3000க்கும் மேற்பட்ட பெதுமக்களுக்கு வழங்கினார். மேலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பர்வையிட்டு மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கும்மாறு கூறினார். அருகில் வட்ட செயலாளர் எம்.கண்ணன், எஸ்.சங்கர், கோ.நடராஜன், ஆர்.ராஜி, எஸ்.ஜெனிபர்மேரி, ஆர்.புவனேஷ்வரி, வி.ஏழுமலை எம்.முருகன், ஆர்.ராஜேஸ்வரி, எஸ்.ஸ்டிபன்,கே.ரவி உட்பட பலர் உள்ளனர்.