PUBLIC NEWS TV- சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஊழியர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

PUBLIC NEWS TV- சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஊழியர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

PUBLISHED:20-Oct-2017

 

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார்  ஓட்டலில் திடீர்ரென  சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஊழியர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாம்பரம், ராமகிருஷ்ணா தெருவில் உள்ள ஒரு தனியார்  ஓட்டலில் நேற்று முன்தினம் காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓட்டலில் இருந்த ஒரு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் சமையலறை முழுவதும் நெருப்பு மற்றும் கரும்புகை பரவியது. ஊழியர்கள் ராகுல், ஷாரூக் உட்பட           7 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

தகவலறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




Recommended For You