வடசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் 43-வது வட்டத்தில் உள்ள புதுமனை குப்பம், பவர் குப்பம், சிங்காரவேலர் நகர், எம்ஜிஆர் நகர், பல்லவன் நகர், திடீர் நகர், வினாயகபுரம், தண்டையார் நகர், YMCA குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி வடசென்னை அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையிலும் முன்னாள் எம்எல்ஏ. கே.குப்பன், நீலாங்கரை முனுசாமி, ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், ஏ.கணேசன் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி துவக்கி வைக்கிறார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.