PUBLIC NEWS TV-எண்ணூரில் தண்ணீர் லாரி மோதி இரண்டு வாலிபர் உயிரிழப்பு.

PUBLIC NEWS TV-எண்ணூரில் தண்ணீர் லாரி மோதி இரண்டு வாலிபர் உயிரிழப்பு.

PUBLISHED:25-Oct-2017

எண்ணூரில்  லாரி மோதி இரண்டு  வாலிபர் உயிரிழப்பு. ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

சென்னை:-
எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும்  சுபாஷ் வயது 20  ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். 
அதே குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பிரவீன் வயது 20 விக்கி வயது 23 மூவரும்  நண்பர்கள்.

இவர்கள்  மூவரும்  ஒரே மோட்டார்  சைக்கிளில்   பாரிமுனை சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவீன் ஓட்டி வந்தார்.

 எண்ணூர் அருகே   வந்து கொண்டிருந்தபோது  பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மோட்டார்  சைக்கிளில் சென்ற மூவரும்  தூக்கி வீசப்பட்டனர். அப்போது லாரியில்  சிக்கி சுபாஷ், பிரவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த விக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார்   வழக்குப்பதிவு செய்து  லாரி டிரைவர் அய்யப்பன் என்பவரை கைது செய்து  விசாரித்து வருகின்றனர். 




Recommended For You