திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதி 7வது வட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர்,கார்கில் நகர்,ராஜாஜி நகர்,உள்ளிட்ட பகுதி முழுவதும் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டு மழைநீர் தேங்கிவுள்ள பகுதிகளை அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு மாநகராட்சி உழியர்களை பணியில் ஈடுபடுத்தி உடனடியாக மழைநீரை அப்புறபடுத்தினார்.
மேலும் பொதுமக்களிடம் மழையால் ஏற்ப்படுவுள்ள பாதிப்புகளை கேட்டறிந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கும்மாறு கூறினார். அருகில் வட்ட செயலாளர் எம்.கண்ணன், உட்பட பலர் இருந்தனர்.