சென்னையில் தொடந்து பெய்து வரும் கனமழையால் பால் வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது இதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் தொகுதியில் உள்ள அண்ணாமலை நகர் பகுதி முழுவதும் மழை நீர் அதிகளவு தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் தொடர்ந்து ஐந்தாவது நாட்களாக உணவு ,பிரட் பாக்கெட்டுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து கனமழை பெய்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பொது மக்களுக்கு ஆறுதல் கூறி மழைநீரை உடனடி அகற்ற நடவடிக்கை எடுக்கக்கும்மாறு மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினார்.