திருத்தணி அடுத்த எஸ்.அக்ரகாரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.என்.ஆர்.கண்டிகையை சேர்ந்தவர் கணேஷ் 35, விவசாயி. இவரது மனைவி சாந்தி 30. இவர்களுக்கு, ஒன்றரை வயதில் தினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், குழந்தை தினேஷ் நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது, அங்கு தண்ணீர் நிரம்பி இருந்த தொட்டியில் தினேஷ் எட்டி பார்த்தபோது கால் தவறி அதில் விழுந்துள்ளான்.
ஆனால், இதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பின்னர் பெற்றோர் குழந்தையை தேடியபோது,தண்ணீர் தொட்டியில் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவனை மீட்டு, பீரகுப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர்.