PUBLIC NEWS TV- திருவொற்றியூர் தொகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

PUBLIC NEWS TV- திருவொற்றியூர் தொகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

PUBLISHED:08-Nov-2017

திருவெற்றியூர் தொகுதியில்
மழைநீர் சூழ்ந்துள்ள  பகுதிகளை ஆர்.பி.உதயக்குமார் பார்வையிட்டார். 

கலைஞர் நகர், சத்தியமூர்த்தி நகர்,கார்கில் நகர்   உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டார்.

அங்கு வெகுவாக பாதிக்கப்பட்ட கலைஞர் நகர், ராஜா சண்முகம் நகர், அம்பேத்கர் நகர், பகுதிகளை பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை  மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்ற அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கார்கில் நகரையோட்டியுள்ள பக்கிங் கால்வாய் பகுதியை ஆய்வு  செய்து மழைநீர் சூழ்ந்துள்ள பகுதி மக்களுக்கு உணவுகளை உடனடியாக வழங்க ஆவன செய்யுமாறு அதிகாரிகளை அமைச்சர் ஆர் பி. உதயகுமார் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக திருவெற்றியூர் மண்டல 4ல் அலுவலகத்தில் மழை வெள்ள நிவாரண மீட்புக்கான ஆய்வு கூட்டம் வருவாய் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிமுக திருவெற்றியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன், சிவில் முருகேசன், மு.தனரமேஷ்,மற்றும் மண்டல அதிகாரி, மாநகராட்சி   சுகாதாரத்துறை, குடிநீர் மற்றும் மின் வாரியம், வருவாய் துறை அதிகாரிகள், உள்பட அதிமுகவினர் பலர் உடன் இருந்தனர்.




Recommended For You