PUBLIC NEWS TV- குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிய காவல் ஆணையர்!!?.

PUBLIC NEWS TV- குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிய காவல் ஆணையர்!!?.

PUBLISHED:14-Nov-2017

சென்னை:-

குழந்தைகள் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளை தன் அலுவலகத்துக்கு அழைத்து இனிப்பு வழங்கி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கொண்டாடினார்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்கள் நேற்று  சென்னை  பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயிலும் 11 மாணவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது காவல் ஆணையாளர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் டான்பாஸ்கோ அன்பு இல்ல சமூகபணியாளர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சென்னை பெருநகர அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீஸார் நடுவாங்கரை நாதமுனி தெருவில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதே போன்று பூக்கடை காவல் மாவட்டத்தில் பூக்கடை, யானைக்கவுனி, வடக்கு கடற்கரை, எஸ்பிளனேடு முத்தியால்பேட்டை ஆகிய காவல் நிலைய எல்லைகளில் உள்ள ஈ.என்.வி சங்கம் ஆரம்பப் பள்ளி, மணிலால் மேத்தா உயர் நிலைப்பள்ளி, டாக்டர் ரத்தினபெல் சுப்பிரமணியம் நர்ஸரி பள்ளி, ஹாஜி எஸ்ஸா அப்பாசையித் பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து போலீஸார் குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.




Recommended For You