PublicNewsTv-சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மினி வேனில் வந்த குட்கா, பான்மசாலா பறிமுதல்.

PublicNewsTv-சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மினி வேனில் வந்த குட்கா, பான்மசாலா பறிமுதல்.

PUBLISHED:17-Nov-2017

சென்னை;-

சென்ட்ரல் ரயில் நிலையம்  அருகே வால்டாக்ஸ் சாலை யானைகவுனி போலீஸ் ஆய்வாளர் வெங்கட்குமார் தலைமையிலான போலீசார்  வாகன சோதனை நடத்தினார்கள்.

 அவ்வழியே வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பான், குட்கா தயாரிக்க தேவையான பொருட்கள் இருந்தன. மொத்தம் 10 மூட்டைகளில் இருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய்-2 லட்சம் ஆகும்.

குட்காவை  கடத்திக்  வந்த ஆகாஷ் திவாரி மற்றும்  வேன் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வேனையும் பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் குட்கா, பான்மசாலா தயாரிப்பதற்கான பொருட்களை ஆகாஷ் திவாரி வட மாநிலங்களில் இருந்து வாங்கியுள்ளனர். பின்னர் துணி பார்சல் என்று ஏமாற்றி ரெயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு கொண்டு வந்து அங்கிருந்து மினி வேன் மூலம் கடத்தி சென்றது தெரியவந்தது.

அவர் இதேபோல் இதற்கு முன்பும் பான், குட்கா தயாரிப்பதற்கான பொருட்களை கடத்தி வந்து பான், குட்காவாக தயாரித்து சென்னை புறநகர் பகுதிகளில் சப்ளை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.




Recommended For You