PUBLIC NEWS TV-காவல் நிலையத்தில் கைதி தற்கொலை முயற்சியால் பரபரப்பு.

PUBLIC NEWS TV-காவல் நிலையத்தில் கைதி தற்கொலை முயற்சியால் பரபரப்பு.

PUBLISHED:22-Nov-2017

சென்னை:-

பெரம்பூர் திரு.வி.க.நகர் கோபாலபுரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாலிபர் போலீசாரின் வண்டியை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசாார், வாகனத்தில் அவரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் திரு.வி.க.நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு ெசன்று விசாரித்தனர். அதில், திரு.வி.க.நகர் காமராஜர் 1வது தெருவை சேர்ந்த சரவணன் வயது (28) , இவர் மீது மாதவரத்தில் அருள் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கு, நாகர்கோவிலில் ஜான்ராஜ் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கு உட்பட பல்வேறு அடிதடி, வழிப்பறி வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

 மேலும், கடந்தாண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட இவர், ஒரு மாதத்துக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் எதற்கு அந்த இடத்துக்கு வந்தாய், ஏன் போலீசாரை பார்த்து ஓடினாய் என்று போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எழுந்த சரவணன், காவலர்களை தள்ளிவிட்டு பாய்ந்து சென்று, அங்கிருந்த  டியூப் லைட்டை இரண்டாக உடைத்து தனது கழுத்தில் குத்திக் ெகாண்டார்.

இதனால், அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக  அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு காவல் நிலையம் கொண்டு வந்து மீண்டும் விசாரித்தனர். பின்னர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சரவணன் கைது கண்டித்து அவரது மனைவி மற்றும் தாய் திருவிக நகர் பல்லவன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.




Recommended For You