PublicNewsTv- பட்டாசுகள் வெடித்து இரட்டை இலை தீர்ப்பை வரவேற்று மகிழ்ச்சியை தெரிவித்த அதிமுகவினர்.

PublicNewsTv- பட்டாசுகள் வெடித்து இரட்டை இலை தீர்ப்பை வரவேற்று மகிழ்ச்சியை தெரிவித்த அதிமுகவினர்.

PUBLISHED:23-Nov-2017

சென்னை

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதனையொட்டி அதிமுக முக்கிய தலைவர்களான துணை முதல்வர்  ஒ.பன்னீர்செல்வம்,முதல்வர்   கே.பழனிசாமி  உற்சாகத்தில் உள்ளனர். 

இது தொடர்பாக  செய்தியாளர்களிடம்  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சிறப்பு பேட்டி அளித்தார்.

 புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்துக்கு  ஜெயலலிதா கட்டிக்காத்த  இரட்டை இலை சின்னம் இன்று தலைமை தேர்தல் ஆணையத்தால் விசாரணை செய்து  உறுதியான தீர்ப்பை  வழங்கியுள்ளது தர்மம் வென்றது அதர்மம் தோற்றது.  

இதனைதொடர்து  எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு இ.மதுசூதனன் மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து இரட்டை இலை தீர்ப்பை வரவேற்று மகிழ்ச்சியை தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அருகில் மாவட்ட ஜெ பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், ஏ.கணேசன்  உள்பட  மாவட்ட பகுதி  வட்ட கழக நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You