செப்டம்பர் 1ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

செப்டம்பர் 1ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

PUBLISHED:29-Aug-2017
செப்டம்பர் 1 முதல் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் வாகனங்கள் விற்பனை செய்யக்கூடாது என வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என போக்குவரத்து காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் விபத்துகள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து லைசென்ஸ் இல்லையென்றால் வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்று போக்குவரத்து காவல்துறை கமிஷனர் அதிரடி சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். மேலும், புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக்வே கூடாது என்றும் அதில் கூறி உள்ளார். தமிழக, போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சார்பு அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில், இந்த ஆண்டு ஜூலை வரை, 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன. அவற்றில், 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள், டிரைவர்களின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன. இதைக் குறைக்க மோட்டார் வாகன சட்டங்களின்படி வாகன விற்பனையாளர்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால், விற்பனையாளர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும். அதேபோல, புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.


Recommended For You