PublicNewsTv-மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்ததில் 3 பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்!?.

PublicNewsTv-மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்ததில் 3 பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்!?.

PUBLISHED:24-Nov-2017

சென்னை;-

ரெட்ஹில்ஸ் பகுதியில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்ததில் 3 பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்.

நேற்று இரவு விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, பழனி வயது 65 அவரின் மனைவி நவநீதம் வயது 55 மற்றும் அவர்களின் மகள் பவித்ரா வயது 26 ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பழனியின் மருமகன் ஐயப்பன் மற்றும் ஓட்டுநர் கந்தவேல் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கொளத்தூரைச் சேர்ந்தது பழனியின் குடும்பம். அவர்கள் அனைவரும் மீஞ்சூரில் தங்கள் உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நேற்று  இரவு 9.30 மணியளவில் வாகனம் ரெட்ஹில்ஸ் அருகே உள்ள கட்டிமுடிக்கப்படாத மேம்பாலத்தில் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. அருகில் வசிப்பவர்கள் யாரும் அங்கே தடுப்புகள் எதையும் அமைக்காததால், ஓட்டுநருக்கு மேம்பாலம் கட்டிமுடிக்கப்படாதது பற்றித் தெரியவில்லை.

இதனால் மேம்பாலத்தில் மற்றொரு முனைக்குச் சென்ற கார், தொடர்ந்து பயணிக்க வழியில்லாமல் மேம்பாலத்தில் இருந்து 30 அடி கீழே இருந்த பள்ளத்தில் விழுந்தது.

ஓட்டுநர் கந்தவேலும், ஐய்யப்பனும் காரில் இருந்து குதித்துவிட, மற்றவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்'' என்றனர். நடந்த விபத்து குறித்து சோழவரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Recommended For You