PublicNewsTv-நடிகர் ஜோதிகா,இயக்குனர் பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

PublicNewsTv-நடிகர் ஜோதிகா,இயக்குனர் பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

PUBLISHED:27-Nov-2017

கரூர் :-

நாச்சியார் டீசரில் கெட்டவார்த்தை பேசியது தொடர்பாக ஜோதிகா, பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலா, இயக்கம் மற்றும் தயாரிப்பில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஜோதிகா டீசரின் முடிவில் கெட்டவார்த்தை பேசியிருப்பார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து ஜோதிகா மற்றும் பாலா மீது கோவை, மேட்டுபாளையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தை காரணம் காட்டி கரூர் குற்றவியல் நீதிமன்றத்திலும் ஜோதிகா மற்றும் பாலா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.




Recommended For You