சென்னை:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை யொட்டி, டிசம்பர்., 21ல், ஆர்.கே.நகர் தொகுதிக்கு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், டிசம்பர் ., 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி அன்று, ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.கே.நகர் வாக்காளர்கள், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்தால், அவர்களுக்கு ஓட்டுப்பதிவு அன்று, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.