முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை மாவட்டச் செயலாளர் கூட்டத்தை துணை பொதுச்செயலாளர்தான் கூட்ட வே

முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை மாவட்டச் செயலாளர் கூட்டத்தை துணை பொதுச்செயலாளர்தான் கூட்ட வே

PUBLISHED:04-Sep-2017

 

முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று மாலை சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள் இல்லை என்று வெளியான செய்தி தவறானது. ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாள் என்பதால் 10 எம்.எல்.ஏக்கள் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்குச் சென்றனர்.

மாவட்டச் செயலாளர் கூட்டத்தை துணை பொதுச் செயலாளர்தான் கூட்ட வேண்டும். மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கூட்ட முதல்வருக்கு அதிகாரம் இல்லை.

முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். கொறடா நோட்டீஸ் அனுப்பிய பிறகு எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது ஏன்  முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம். ஆளுநர் இரண்டு நாளில் அழைப்பார் என்று நம்புகிறோம். ஆளுநர் அழைக்காவிட்டால் இரண்டு நாட்கள் கழித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

திமுக கூட்டத்தில் பங்கேற்போம் என்று திவாகரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து  என்று கூறினார்  தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.




Recommended For You