PUBLICNEWSTV-ஓய்வு பெற்றஅரசு அதிகாரி வீட்டில் 300 சவரன் கொள்ளை.

PUBLICNEWSTV-ஓய்வு பெற்றஅரசு அதிகாரி வீட்டில் 300 சவரன் கொள்ளை.

PUBLISHED:06-Sep-2017

 

மேற்கு தாம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 300 சவரன் நகை,மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

சி.டி.ஓ காலனியில் மத்திய பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற அதிகாரி ராமன்  வயது 66 தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.  மென்பொருள் பொறியாளராக அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் ராமனின் மகன்  திருமணம் அண்மையில் நடைபெற்றது.

ராமன்மகனுடன் வெளியூர்  செல்வதற்கு விசா பெறுவதற்காக புதன்கிழமை காலை மனைவி,மகன்,மருமகளுடன் சென்னைக்குச்  சென்றார்.மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க இரும்பு கிரில்,கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

படுக்கையறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 300 சவரன் நகைகள்,ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்ததுள்ளது.

இச்சம்பவம்  குறித்து தாம்பரம் காவல்நிலையத்தில் ராமன்  புகார் அளிதார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். 




Recommended For You