PUBLICNEWSTV:-துரோகிகள் ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது தினகரன் ஆவேசம்.

PUBLICNEWSTV:-துரோகிகள் ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது தினகரன் ஆவேசம்.

PUBLISHED:07-Sep-2017

துரோக ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது  தினகரன் ஆவேசபேச்சு.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் நீக்கும் வரை ஓயமாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது அவருடன் 3 எம்எல்ஏக்கள், 7 எம்பிக்களும் சென்றிருந்தனர்.  ஆளுநரை சந்தித்த  பிறகு செய்தியளார்களிடம் பேசிய தினகரன், 

முதல்வரை மாற்றக் கோரி ஆகஸ்ட் 22ல் தந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். தமிழக அரசியல் சூழலை கவனிப்பதாகவும், விரையில் முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறினார். 

மிரட்டல் குதிரை பேரங்களுக்கு ஒருசிலர் மாறலாம். ஒருவர் அணி மாறிய நிலையில் 3 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஜக்கையன் அணி மாறியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தலைமை நிலையச் செயலாளர் பதவியை என்னிடம் கோரினார் ஜக்கையன். நியாயம் யார் பக்கம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். முதல்வர் கூட்டிய கூட்டத்துக்கு போதிய எம்எல்ஏக்கள் வரவில்லை. 

பெரும்பான்மை இல்லை என்பதை அவர்கள் கூட்டிய கூட்டம் தெளிவுப்படுத்தியது. ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் விரைவில் வெளியே வருவார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் நீக்கும் வரை ஓயமாட்டோம். துரோக முதல்வரின் துரோக ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது. அணியில் சேர எம்எல்ஏக்கள் மிரட்டப்படுவது குறித்தும் தெரியப்படுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார். 




Recommended For You