சென்னை ஆர்.கே .நகரில் வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையிலும் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம் முன்னிலையிலும் சசிகலா, தினகரன் ,வெற்றிவேல், ஆகியோரின் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி மூவரின் உருவ பொம்மைகளை எரித்தனர் இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்வுடன் காணப்பட்டது.
மேலும் இது குறித்து வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது
அதிமுகவில் ஓ.பி.எஸ். அணி ஈ.பி.எஸ்.அணி ஆகிய இரு அணியினரும் இணைந்த பிறகு அதிமுக நிர்வாகிகளை தினகரன் மாவட்ட நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நேமித்து வரும் நடவடிக்கை வேடிக்கையாக உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நேமிக்கப்பட்ட
மாவட்ட கழக நிர்வாகிகளை நீக்க தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் அதிமுகவில் அடிப்படை உறுப்பினரே இல்லாத தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரை ஆட்சியிலும் கட்சியிலும் தலையிடாத வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போதே கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவித்தார். மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.