PUBLIC NEWS TV-காவல் அதிகாரிகள்,காவலர்கள் வரை உற்சாகத்துடன் பணிபுரிய புதிய வழிமுறை கையாளும் எ.பி.!?

PUBLIC NEWS TV-காவல் அதிகாரிகள்,காவலர்கள் வரை உற்சாகத்துடன் பணிபுரிய புதிய வழிமுறை கையாளும் எ.பி.!?

PUBLISHED:07-Nov-2017

 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் கடந்த மே மாதம் பொறுப்பெற்றார். அவர் பெறுப்பேற்றதில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதேநேரம் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவல்துறையினரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறார்.

இதில், தினமும் காலை 7 மணிக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து மைக்கில் அனைத்து போலீஸாரும் கேட்கும் வகையில் தூய தமிழில் காலை வணக்கம் சொல்லப்படும். பின்னர் அன்றைய நாளின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு திருக்குறளும், அதற்கான விளக்கத்தையும் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து பிறந்த நாள் மற்றும் திருமண நாள் காணும் போலீஸாரின் பெயரை கூறி வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதனை மைக், வாக்கிடாக்கி மூலம் கேட்கும் போலீஸார் உற்சாகத்துடன் அன்றைய பணிகளை மேற்கொள்கின்றனர்.




Recommended For You