விழுப்புரம்:-
குட்கா ஊழல் விவகாரம் தமிழகத்தை உலுக்கத் தொடங்கிய நிலையில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாக இருக்கும் ஜெயக்குமார் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
ஜெயக்குமார் துணை கமிஷனராக பொறுப்பில் இருந்த போதுதான் குட்கா ஊழல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெற்றது ஆனால் இவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஊழல் தொடர்பான தகவல்களை ஜெயக்குமார் என்னிடம் தரவில்லை.
ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்கு தெரியும்.
அவர் பணியில் சரியாக செயல்படவில்லை என்று அடுக்கடுககாக் ஜார்ஜ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆனால் விழுப்புரம் எஸ்.பி.யாக இருக்கும் ஜெயக்குமார் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என கூறினார்.