PUBLIC NEWS TV - ஆட்சியர் அலுவலக புதிய நுழைவு வாயில் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…!

PUBLIC NEWS TV - ஆட்சியர் அலுவலக புதிய நுழைவு வாயில் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…!

PUBLISHED:23-Aug-2019

விழுப்புரம்:-

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக

புதியதாக கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலை, மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன் தலைமையில்

சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சுற்றுசுவர் மற்றும் நுழைவு வாயில் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகd ம் கலந்து கொண்டு நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, முன்னாள் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி ஏழுமலை, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) க.சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன்,

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் இராஜேந்திரன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மோகன், வட்டாட்சியர் பிரபுவெங்கடேஸ்வரன், மாவட்ட

ஆவின் தலைவர் பேட்டை முருகன், மாவட்ட பண்டகசாலை தலைவர் பசுபதி நகர செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளரான ராமதாஸ், சிந்தாமணி வேலு, சதிஷ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு,

கூட்டுறவு சங்க தலைவர் தங்கசேகர், முன்னாள் கவன்சிலர் ராமதாஸ், கழக நிர்வாகிகள் சக்திவேல், குமரன், கோல்டு சேகர், தயாநிதி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




Recommended For You