PUBLIC NEWS TV- நிச்சயதார்த்தம் முடிந்த, பெண் உள்பட தாய் தந்தை விஷம் குடித்து தற்கொலை!?.

PUBLIC NEWS TV- நிச்சயதார்த்தம் முடிந்த, பெண் உள்பட தாய் தந்தை விஷம் குடித்து தற்கொலை!?.

PUBLISHED:27-Nov-2017

 திருவாரூர்;-

திருத்துறைப்பூண்டியை அடுத்த அம்மளூரைச் சேர்ந்தவர் கணேசன்(55). நகைத் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(50), மகன்கள் ராஜ்குமார்(25), ஹரிஹரசுதன்(20), மகள் கீதா(23). இதில், ராஜ்குமார் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். ஹரிஹரசுதன் மனவளர்ச்சி குன்றியவர்.

கீதாவுக்கும், திருவாரூரைச் சேர்ந்த ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, ஜனவரியில் திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் நேற்று வீட்டுக்குள் கணேசன், ராஜேஸ்வரி, கீதா ஆகியோர் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். மாப்பிள்ளை வீட்டில் கூடுதல் வரதட்சணை கேட்டதால் மனமுடைந்து இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரனை நடத்தி  வருகின்றனர்.




Recommended For You