PUBLICNEWSTV-இதுவரை எனக்கு பாலியல் தொல்லை இல்லை, நடிகை சமந்தா!

PUBLICNEWSTV-இதுவரை எனக்கு பாலியல் தொல்லை இல்லை, நடிகை சமந்தா!

PUBLISHED:09-Oct-2018

மதுரை:-

சினிமா உலகில் நிலவி வரும் பாலியல் குற்றங்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருவது குறித்து நடிகை சமந்தா நேற்று  மதுரை பேட்டியளித்துள்ளார்.

மதுரையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தா, தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதை அறிந்து

மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், தனது வெற்றிக்கு ரசிகர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “எல்லாத் துறைகளிலும் உள்ளது போல் சினிமா துறையிலும் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளால் பாலியல் ரீதியான புகார் உள்ளிட்ட பிரச்சனைகளில் பெயர் கெடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சினிமாவில் எனக்கு எந்த குறையும் இல்லை. எனது 10 ஆண்டு சினிமா வாழ்வில் இதுவரை எனக்கு எந்த வித பாலியல் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை.

சினிமா துறை என்பது எனக்கு கடவுளுக்கு சமமானது.” எனக் கூறினார்.

மேலும் முன்னனி நடிகர் அரசியலுக்கு வருவதை பற்றிய கேள்வி கேட்டப்போது, அரசியலுக்கு வரும் அனைவருக்கும் 

எனது வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர், தமிழகத்தில் ரசிகர் இல்லாமல் நான் இல்லை, சினிமா துறையில் எனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய பங்கு என்றும் குறிப்பிட்டார்.




Recommended For You